அழுகிய நிலையில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபர்... சென்னையில் படுபயங்கரம்

x

போரூர் அடுத்த செட்டியார் அகரம் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான கோபியும், கார் மெக்கானிக் ஷெட் நடத்தி வரும் லோகநாதனும் தீபாவளிக்கு முந்தைய நாள், ஒன்றாக மது அருந்தி உள்ளனர். பின்னர் லோகநாதன் சென்றுவிட, கோபி மட்டும் கார் ஷெட்டில் அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. இந்நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து வந்து பார்த்து போது, மெக்கானிக் ஷெட்டில் உள்ள கார் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அழுகிய நிலையில் இருந்த கோபியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்