"கோட்டையை முற்றுகையிடுவோம்" பிரபல இயக்குனர் பரபரப்பு பேச்சு

x

செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்கத்துக்கு விளைநிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடக்கோரி தொடர்ந்து 75 நாட்களாக கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் விரிவாக திட்டத்திற்கு சுமார் 3,000 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்தக்கோரி 11 கிராம மக்கள் 75 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் பேரரசு கட்சி தலைவரும், இயக்குனருமான கௌதமன், இத்திட்டத்தை 100 நாட்களுக்குள் நிறுத்தவில்லை என்றால் சென்னை கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்