போலி சாதி சான்றிதழ் மோசடி.. பெண் கவுன்சிலர் செய்த பித்தலாட்டம்.. அம்பலமானதும் எடுத்த முடிவு

x

கொடைக்கானலில், போலி சாதிச்சான்றிதழ் கொடுத்து பெண் கவுன்சிலர் வெற்றி பெற்றதாக புகார் எழுந்துள்ளது.

2021-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில், கொடைக்கானல் 20வது வார்டில், தி.மு.க, அ.தி.முக உள்ளிட்ட க‌ட்சிகளைச் சேர்ந்த‌ 5 பேர் போட்டியிட்டனர். இந்த வார்டில் பரிமளா என்பவர் தி.மு.க கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் போலி சாதிச் சான்றிதழ் மூலம் வெற்றி பெற்றதாக, இந்த வார்டை சேர்ந்தவர்கள் சிலர் புகார் அளித்தனர். மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஆவணங்கள் கோரினர். இதனிடையே, தேர்தலில் இனி போட்டியிடப்போவதில்லை என பரிமளா கூறிய ஆடியோ வெளியானது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்