உறவினர்களிடையே வெடித்த அடிதடி..சொட்ட சொட்ட இரத்தம் - கிருஷ்ணகிரியில் பரபரப்பு

x

ஊத்தங்கரை அருகே நிலத்தகராறு காரணமாக உறவினர்களிடையே அடிதடி ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜவேலு, பூபாலன், ஜெயகாந்தன் மற்றும் புஷ்பகாந்தன். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணி,சிலம்பரசன், சிற்றரசு மற்றும் சந்தியா ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட மோதலில் ராஜவேலு, பூபாலன், ஜெயகாந்தன் மற்றும் புஷ்பகாந்தன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்