முன்னாள் டிஜிபியின் மகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த மருமகள்... முன் ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்

x

முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் பிரபு திலக், மகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய முன்னாள் மனைவி ஸ்ருதி, அவரது சகோதரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் கைது செய்யக்கூடும் என்பதால், ஸ்ருதியும், அவரது சகோதரர் விஜய் ஆனந்தும் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி டீக்காராமன், பாலியல் தாக்குதல் குறித்து புகார் தெரிவிக்காத ஸ்ருதி மீதான போக்சோ குற்றச்சாட்டுக்களுக்கு அதிகபட்சம் 6 ஆறு மாதங்கள் மட்டுமே தண்டனை விதிக்க முடியும் எனக் கூறி, அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வடபழனி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்தார்.


Next Story

மேலும் செய்திகள்