காய்கறி வியாபாரிக்கு அல்வா கொடுக்க நினைத்த முன்னாள் ராணுவ வீரர், வழக்கறிஞர். அலேக்காக தட்டி தூக்கிய போலீஸ்

x

கள்ள நோட்டை மாற்ற முயன்ற முன்னாள் ராணுவ வீரர் மற்றும் வழக்கறிஞரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 45 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, மணி என்பவர் சாலையோரம் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரிடம் விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணியன் மற்றும் பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை ஆகிய 2 பேர் கள்ள நோட்டுகளை மாற்ற முயற்சி செய்துள்ளனர். அப்போது சுதாரித்துக் கொண்ட மணி, இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க, 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், 45 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள், ஒரு கட்டிங் மெஷின், ஒரு கவுண்டிங் மெஷின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்ததடன், இந்த கள்ள நோட்டுகளை அச்சடித்துக் கொடுத்த குமார் என்ற நபரையும் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்