சட்டவிரோதமாக போதை மாத்திரைகள்... திரை மறைவில் சிக்கிய 3 பேர்...

x

ஈரோடு அருகே, சட்டவிரோதமாக போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கில், 17 வயது சிறுவன் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பவானி அருகே உள்ள சித்தோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த தினேஷ்குமார் என்ற நபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், தனியார் பேன்சி ஸ்டோரில் இருந்து வலி நிவாரண மாத்திரைகள் வாங்குவது தெரியவந்ததை அடுத்து, அந்த கடையில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 10 ஆயிரம் மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, தினேஷ் குமார் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பரத் குமார் மற்றும் சிறுவன் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்