புகார் சொன்ன இளைஞர் - கடுப்பான கவுன்சிலர் செய்த செயல்

x

ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் சாக்கடை அடைப்பு என புகார் தெரிவித்தவரை கவுன்சிலர் தனது ஆதரவாளர்களுடன் சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குள்ளரங்கம்பாளையம் காலனியை சேர்ந்த ரமணிசந்திரன், அந்த பகுதியின் பேரூராட்சி கவுன்சிலரான கவின்குமாரை தொடர்புகொண்டு, தனது பகுதியில் சாக்கடை அடைப்பு உள்ளதாக புகார் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர் கவின்குமார், தனது ஆதரவாளர்களுடன் சென்று ரமணிசந்திரனின் வீடு புகுந்து தாக்கி, சாதி குறித்தும் அவதூறாக திட்டியுள்ளார். இதனையடுத்து, கவின்குமார் உள்பட நான்கு பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்