கலெக்டரின் செல்போன் எண் "அபேஸ்" | அதிகாரிகளுக்கு மெசேஜ் அனுப்பி பணமோசடி முயற்சி | "குறுஞ்செய்தி வந்தால் ஏமாற வேண்டாம்"

x


ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணியின் செல்போன் எண்ணை மர்ம நபர்கள் அண்மையில் ஹேக் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, பண மோசடியில் ஈடுபடும் நோக்கத்துடன், ஆட்சியருடன் தொடர்பில் இருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிலரின் தொலைபேசி எண்ணிற்கு மர்மநபர்கள் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, போலீசாரிடம் புகார் அளித்தார். மேலும், தனது செல்போன் எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தால், பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்றும், பொய்யான தகவல் வந்தால் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்றும் ஆட்சியர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.






Next Story

மேலும் செய்திகள்