கள்ளக்காதலியுடன் வியாபாரி உல்லாசம்.. நடுரோட்டில் ஓட ஓட வேட்டையாடிய கும்பல்.. ஈரோட்டில் பரபரப்பு சம்பவம்

x

கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற மீன் வியாபாரி, திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் கொல்லம்பாளையம் பகுதியில் மீன் விற்பனை செய்து கொண்டிரு்நத சத்தியமூர்த்தியை, அந்த வழியாக வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை அரிவாளால் வெட்ட முயன்றது. அப்போது சுதாரித்து தப்பியோடிய சத்தியமூர்த்தியை, மர்ம கும்பல் துரத்திச் சென்று வெட்டியதில், அவருக்கு கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மகும்பலை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்