தன்னை பற்றி வந்த நியூஸை பார்த்து ஸ்டேஷன் ஓடிவந்த புதுமணப் பெண்..எழுதி கொடுத்த கடிதம்..

x

தாம்பரத்தில் 80 சவரன் நகைகளுடன் மாயமான புதுமணப்பெண், பெற்றோர் கட்டாயத்தால் திருமணம் செய்ததாகவும், தனித்து வாழப்போவதாகவும் காவல்நிலையத்தில் ஆஜராகி எழுதிக் கொடுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரை கடந்த மாதம் திருமணம் செய்த இளம்பெண், கல்லூரிக்கு செல்வதாக கூறி திருமணமான 22 நாட்களில் நகைகளுடன் தலைமறைவானார். புகாரின் பேரில் காதலனுடன் இளம்பெண் சென்றாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கறிஞர்களுடன் புதுமணப்பெண் தாம்பரம் காவல்நிலையத்தில் ஆஜரானார். விசாரணையில், தான் மாயமானது குறித்து தொலைக்காட்சியில் வெளியான செய்திகளை பார்த்து வந்ததாகவும், பெற்றோரின் கட்டாயத்தில் திருமணம் செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தான் மேஜர் என்பதால் கணவர் மற்றும் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என்றும், தனித்து விடுதியில் தங்கி வாழப்போவதாகவும் கடிதம் எழுதிக்கொடுத்து சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்