234 MLA-கள் - தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய மனு

x

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மார்ச் 16ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களும் மூடப்பட்டன. தேர்தல் முடிந்து ஒரு வாரம் கடந்தாலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், எம்.எல்.ஏ அலுவலகங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில், மக்கள் பணியாற்ற ஏதுவாக, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களை திறக்குமாறு, 234 எம்.எல்.ஏக்களுக்கும் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இ-மெயில் மூலம் இந்த கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது ஓரிரு நாளில் தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்