`தேர்தல் நன்கொடைக்கு தடை' - நவ.1ல் இறுதி விசாரணை

x

தேர்தல் நிதி பத்திர நன்கொடைத் திட்டத்துக்கு தடை கோரிய மனுக்கள் மீதான இறுதி விசாரணை, அக்டோபர் 31-ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஏடிஆர் உள்ளிட்ட அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மத்திய அரசு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்புடைய விரிவான மனுக்களின் தொகுப்பை 14-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, மனுக்கள் மீதான இறுதி விசாரணை அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவித்தது.


Next Story

மேலும் செய்திகள்