பொன்முடி தொகுதி.. பிரஷர் போட்ட அதிமுக.. வெளியான முக்கிய அறிவிப்பு

x

திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவித்து, தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம் எழுதியுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி, சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால், தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து திருக்கோவிலூர் தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டும் என அ.தி.மு.க. வலியுறுத்தி வந்த‌து. இந்நிலையில், திருக்கோவிலூர் தொகுதியை காலியானதாக அறிவித்து, தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் முறைப்படி கடிதம் எழுதியுள்ளது. ஏற்கனவே விளவங்கோடு தொகுதியும் காலியாக உள்ளதால், விளவங்கோடு மற்றும் திருக்கோவிலூர் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும், மக்களவைத் தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்