தேர்தல் பயிற்சி வகுப்பு கூலாக போன் பேசிய அலுவலர்கள்

x

பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

ஓமலூரில் நடைபெற்ற பயிற்சி முகாமில் மாதிரி வாக்குப்பதிவு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமை தேர்தல் பொதுப்பார்வையாளர் பாட்டீல் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

நத்தத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் அலுவலர்கள் செல்போனில் மூழ்கியவாறு இருந்தனர். சிலர் பயிற்சி வகுப்புகளில் போதிய மின்விசிறி வசதி இல்லாததால் வகுப்புகளை புறக்கணித்து விட்டு மரத்தடியில் இளைப்பாரி நின்றனர்.

ராசிபுரத்தில் நடந்த முகாமில் அலுவலர்கள் சிலர் தூங்கிக்கொண்டும் செல்போனில் மெசேஜ் அனுப்பிக்கொண்டும் அலட்சியமாக இருந்தனர்.

புதுக்கோட்டையில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான தபால் ஓட்டு போடும் பணியை ஆட்சியர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாள்வது எப்படி என பயிற்சி அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்