காதை கிழித்த பட்டாசு சத்தம்-மிரண்ட மாடு.. மிரட்டிய நபர்-கோடாரியால் கொன்று தீர்த்த கும்பல்

x

சிவகாசி அருகேயுள்ள நமஸ்கரித்தான் பட்டி கிராமத்தில், காளீஸ்வரி என்பவர் தீபாவளியன்று மாடு மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த வீரபாண்டி என்பவர் பட்டாசு வெடித்ததில், மாடுகள் மிரண்டு போனதாகவும், இதை அதே பகுதியை சேர்ந்த பொண்ணுப்பாண்டி மற்றும் முனிராஜ் ஆகிய இருவர் தட்டிக்கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதில், ஏற்பட்ட தகராறில், பொண்ணுப்பாண்டி மீது ஆத்திரத்தில் இருந்த வீரபாண்டி, பொண்ணுப்பாண்டியை தனியே வர வழைத்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், வீரபாண்டி உட்பட ஐவரை கைது செய்த நிலையில் மேலும் இருவரை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்