இரு வீட்டு சுவரின் இடுக்கில் காத்திருந்த எமன் உடல் சிக்கி பறிபோன உயிர் குடிபோதையில் நடந்த கோர சம்பவம்

x

மதுபோதையில் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த நபர், இரு வீட்டு சுவர்களுக்கிடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, ஏனாம் பகுதியில் வசித்து வந்த சிவ சுப்ரமணியம் என்பவர், தாய் தந்தையை இழந்து தனியே வசித்து வந்த நிலையில், சம்பவத்தன்று இரவு மது அருந்தி விட்டு தனது வீட்டு மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்போது, கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்த சுப்ரமணியம், இரு வீட்டு சுவர்களுக்கிடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது அக்கம்பக்கத்தினரை அதிர்ச்சியடைய செய்தது. தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுப்ரமணியத்தின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்