குடிபோதையில் தகராறு - நண்பனை தாக்கிய இளைஞர் பீர் பாட்டிலால் குத்தி கொலை

x

பழைய வண்ணாரப் பேட்டையை சேர்ந்த சோபன் என்பவருக்கும், பிரசாத் என்பவருக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சோபன் பீர் பாட்டிலால் பிரசாத்தை தலையில் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை அறிந்த பிரசாத்தின் நண்பர்களான ஜோதிபாசு, சுரேஷ், நிர்மல் குமார் ஆகி யோர் கோபத்துடன் சோபனை தேடி வந்துள்ளனர். அப்போது திருவொற்றியூர் மேற்கு மாடவீதியில் நின்று கொண்டிருந்த சோபனை மூன்று பேரும் சேர்ந்து தாக்கியதுடன், ஜோதிபாசு தன்னிடம் இருந்த கத்தியால் சோபனை குத்திவிட்டு தப்பிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார். தகவலறிந்து வந்த திருவெற்றியூர் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன்,

ஜோதிபாசு உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்