மதுபோதையில் பள்ளிக்கு வந்து மாணவிகளை சீண்டும் ஆசிரியர் - கொந்தளித்த பெற்றோர்கள்

x

செங்கம் அருகே மது போதையில் பள்ளிக்கு வரும் ஆசிரியரை பணிநீக்கம் செய்ய கோரி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம் அடிவாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஏழுமலை என்பவர் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மதுபோதையில் பள்ளிக்கு வரும் ஏழுமலை, மாணவ மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசி வருவதாக குற்றம் சாட்டிய பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும் ஏழுமலையை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்