மனநலம் பாதிக்கப்பட்ட நபரை செருப்பால் அடித்து தள்ளிய டிரைவர், கண்டக்டர்.. வைரலாகும் பகீர் வீடியோ

x

கன்னியாகுமரியில், அரசுப் பேருந்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தாக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைகடை அருகே, முடியாம்பாறையை சேர்ந்த மணிகண்டன், மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர் ஆற்றூரிலிருந்து மார்த்தாண்டம் செல்லும் அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது, நடத்துனரிடம் வாக்குவாதம் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் மற்றும் ஓட்டுநர், மணிகண்டனை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகளின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்