டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியை - பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மாணவர்கள்

x

மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியை ராஜேஸ்வரிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக ராஜேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது கல்வி சேவையை பாராட்டி கடந்த 5-ஆம் தேதி சென்னையில் நடந்த ஆசிரியர் தினவிழாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்பட்டது. இதனையடுத்து குத்தாலம் பள்ளிக்கு வருகை தந்த தலைமை ஆசிரியருக்கு பள்ளி மாணவ மாணவிகள் வரிசையாக நின்று பூங்கொத்து, சால்வை வழங்கி கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்