நெருங்கும் தீபாவளி..!மட்டனுக்கு வந்த மவுசு..கிடு கிடுவென உயர்ந்த ஆடுகள் விலை

x

சேலம் மாவட்டம் ஓமலூர், சின்னதிருப்பதி ஆட்டு சந்தைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளன. தீபாவளி பண்டிகை நெருங்கி உள்ளதால் ஆடுகள் விற்பனை சூடிபிடிக்க தொடங்கி உள்ளது. நேற்று கூடிய ஓமலூர், சின்னதிருப்பதி ஆட்டு சந்தைகளில் ஆடுகளை வாங்க வியாபாரிகளூம், பொதுமக்களும் குவிந்தனர். இதனால் ஆட்டின் விலை சராசரியாக ரூபாய் ஆயிரம் வரை அதிகரித்தது. ஒரு ஆடு ரூபாய் 7 ஆயிரத்து 500 முதல் ரூபாய் 35 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று இந்த இரண்டு சந்தைகளில் மட்டும் இரண்டு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்