நெருங்கி வரும் தீபாவளி.. கோடிகளில் கொட்டிய வசூல்

x

தீபாவளியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு ஆட்டுசந்தையில், கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊரட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ஆட்டு சந்தை நடைபெற்றது. இதில், 10கிலோ எடை கொண்ட ஆடு 10 ஆயிரம் ரூபாய் வரையும், 10கிலோ கொண்ட கிடாய் 27 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது. 1 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதால், விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்