தீபாவளி பரிசாக கார், பைக்..! ஆனந்த கண்ணீரில் ஊழியர்கள்.. சர்ப்ரைஸ் கொடுத்த நகைக்கடை அதிபர்

x

தீபாவளி பரிசாக கார், பைக்..! ஆனந்த கண்ணீரில் ஊழியர்கள்.. சர்ப்ரைஸ் கொடுத்த நகைக்கடை அதிபர்

தீபாவளியை முன்னிட்டு தனியார் நகைக்கடை ஒன்று பணியாளர்களுக்கு பைக், கார் பரிசளித்து நெகிழச் செய்துள்ளது...

சென்னை மற்றும் மதுரையில் இயங்கி வரும் பிரபல நகைக்கடையின் 10வது ஆண்டுவிழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது.

நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த ஊழியர்களை கவுரவிக்கும் விதமாக கெட் டூ கெதர் பார்ட்டி நடத்தப்பட்டது.

இதில் அங்கு பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்...

அவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டதுடன், மிகச்சிறப்பாக பணியாற்றிய 8 ஊழியர்களுக்கு காரும், 18 ஊழியர்களுக்கு இருசக்கர வாகனமும் பரிசளித்து கவுரவிக்கப்பட்டது.

கடையின் உரிமையாளர் ஜெயந்திலால் சலானி மற்றும் ஊழியர்கள் பலரும் பரிசு பெற்றவர்களை ஆரத்தழுவி வரவேற்று மகிழ்ச்சி பொங்க வாழ்த்து தெரிவித்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்