"தீபாவளி போனஸ்.." - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

x

போக்குவரத்து கழக தொழிலாளர்களின் தீபாவளி போனஸில், தொழிற்சங்கங்களுக்கான தொகையை பிடித்தம் செய்ய தடை கோரும் வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், போக்குவரத்து கழக தொழிலாளர்களின் தீபாவளி போனஸில், தொழிற்சங்கங்களுக்காக பணம் பிடித்தம் செய்யப்படுவதாகவும், ஊழியர்களின் ஒப்புதல் இன்றி போனஸ் தொகையில் பிடித்தம் செய்ய, தடை விதிக்க வேண்டுமெனவும் கோரப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கும், போக்குவரத்து கழகங்களும் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்