9 நாட்களில் பிரிந்த மனைவி.. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை மதுரவாயலில், மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றதால், புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரவாயல் மூகாம்பிகை நகரைச் சேர்ந்த ராஜேஷுக்கும், சிவரஞ்சனி என்பவருக்கும் கடந்த 25-ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறில் சிவரஞ்சனி தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்
Next Story
