கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பேரிடர் மீட்பு குழு ஆய்வு

x

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை குறித்து பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.


கூடங்குளத்தில் உள்ள 2 அணு உலைகளில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், மேலும் 4 அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.


இந்நிலையில் அணுமின் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், ஒத்திகைகள் குறித்தும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த ஐந்து பேர் ஆய்வு மேற்கொண்டனர்.


அப்போது, அவசர காலங்களில் செய்யப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள், ஒத்திகை குறித்தும் அணு உலை நிர்வாகிகளுடன் ஆலோசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்