நேருக்கு நேர் மோதிய பைக்-கார்.. துடிதுடித்து பலியான சகோதரர்கள்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி

x

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, சுற்றுலா சென்ற கார் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில், சகோதரர்களான விவசாயிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வத்தலகுண்டு அருகேயுள்ள அழகாபுரி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ராஜ் மற்றும் காசிராஜன். சகோதரர்களான இருவரும் பூ விவசாயம் செய்து வந்த நிலையில், சம்பவத்தன்று தோட்டத்தில் விளைந்த அரளி பூக்களை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி சந்தைக்கு சென்றுள்ளனர். மணியக்காரன்பட்டி பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த இருவரும் எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளான நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற கார் மோதி சகோதரர்களான விவசாயிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்த இந்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்