"இறைவன் போட்ட பிச்சை.." - சைலெண்ட் ஆக மிகப்பெரிய சம்பவம் செய்த டி.இமான்

x

நெய்வேலி அருகே நரிக்குறவர் குடும்பங்களுக்கு, இசையமைப்பாளர் டி.இமான், குடிசை வீடுகள் அமைத்து தந்துள்ளார். கடலூர் மாவட்டம் பெரியாக்குறிச்சியில் வசித்து வரும் 6 நரிக்குறவர் குடும்பங்களுக்கு, இசையமைப்பாளர் டி.இமான் குடிசை வீடுகள் அமைத்து தந்துள்ளார். மேலும் அப்பகுதியில் பாடசாலையும் அமைத்து தந்துள்ள அவர், மூன்று வீடுகளுக்கு தார்பாய்கள் வழங்கியுள்ளார். சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்த உதவிகளை செய்துள்ள இமான், கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இந்த உதவிகளை செய்து வருவதாக கூறியுள்ளார். இதுதொடர்பான நிகழ்ச்சியின்போது இமான், கண்ணான கண்ணே பாடலையும் பாடியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்