அடியாட்களை ஏவி கணவன் ரத்தத்தை ஆசையாக பார்த்தாரா மனைவி?

x

#Sivaganga

அடியாட்களை ஏவி கணவன் ரத்தத்தை ஆசையாக பார்த்தாரா மனைவி?

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, சொத்துக்காக கணவரை மனைவி அடியாட்கள் ஏவி தாக்கியதாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

ஆனந்த் - இந்துமதி தம்பதி இடையே கருத்து வேறுபாடால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், கணவர் தன்னை சித்ரவதை செய்வதாக கூறி இந்துமதி ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் திடீரென ஆனந்தின் வீட்டிற்குள் புகுந்த கும்பல் அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது. படுகாயமடைந்த ஆனந்த், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனது சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் தன் மனைவி அவரின் உறவினர்கள் மூலமே தன்னை வீடு புகுந்து தாக்கியதாக கூறி புகாரளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்