சிலை வைக்க மீண்டும் மறுப்பு.. தருமபுரியில் வெடித்த போராட்டம்

x

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே தாதனூர் கிராமத்தில் அம்பேத்கர் சிலை அமைக்க வருவாய்த்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கருப்பு கொடிகட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2016ல் ஊர்மக்கள் சேர்ந்து சிமெண்டால் ஆன அம்பேத்கர் சிலையை நிறுவியுள்ளனர். 3 மாதமாக சிலை திறக்கப்படாமல் இருந்த சிலையை வருவாய்த்துறையினர் அகற்றியுள்ளனர். மேலும் சிமெண்ட் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அமைத்தால் அனுமதி தருவதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து ஊர்மக்கள் ஒன்றினைந்து ரூ.20 லட்சம் மதிப்பில் 450 கிலோ எடை கொண்ட டாக்டர் அம்பேத்கரின் சிலையை நிறுவ இருந்த நிலையில், மீண்டும் சிலையை நிறுவ வருவாய்த்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால், பொதுமக்கள் ஒன்று கூடி வெயிலையும் பொருட்படுத்தாமல் கருப்புக்கொடி கட்டி தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்