"வளர்ச்சி அடைந்தாலும், இன்னும் ஆபத்து இருக்கிறது" - கே.பாலகிருஷ்ணன்

x

77வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளில் பல வளர்ச்சி அடைந்தாலும் நாட்டில் இன்னும் ஆபத்து இருக்கிறது என்று தெரிவித்தார்.

மதவாத சக்திகளும், சாதியவாத சக்திகளும் தங்களை வளர்த்து நாட்டை சீரழிப்பதற்கான முயற்சிகளை செய்வதாகவும் கூறினார்.

மேலும், மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்..


Next Story

மேலும் செய்திகள்