ஆட்சியர் அலுவலகத்திலேயே துணை தாசில்தாரின் வாகனம் திருட்டு - மக்களே உஷார்

x

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு பிரிவு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு துணை தாசில்தாராக பணியாற்றி வரும் மெர்லின் ஜோதிகா, தனது இருசக்கர வாகனத்தை வழக்கம்போல் கட்டிடத்தின் முன் பகுதியில் நிறுத்தி இருந்தார். மாலையில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது தனது வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், சத்துவாச்சாரி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்கள், போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் இவ்வாறு தொடர்ந்து நடைபெறுவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்