துணை மேயரின் வீடு, அலுவலகம் சூறையாடல்.. திமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு - போராட்டத்தில் இறங்கிய மதுரை MP

x

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினரும், மதுரை மாநகராட்சி துணை மேயருமான நாகராஜன் என்பவர் வீடு மற்றும் அலுவலகத்தை மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நபர்கள் மீதும், கொலை செய்ய தூண்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி, ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக, 80வது வார்டு திமுக வட்டச் செயலாளர் கண்ணன், துணை வட்டச் செயலாளர் முத்துவேல் உள்ளிட்ட 6 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்