டெங்கு காய்ச்சலுக்கு உயிருக்கு போராடிய சிறுமி..போராடி காப்பாற்றிய அரசு மருத்துவமனை

x

தேனி மாவட்டம், கன்னிசேர்வைபட்டியைச் சேர்ந்த தம்பதி ஞானமூர்த்தி மற்றும் ஈஸ்வரி. இவர்களது 10 வயது மகள் மோகனாஸ்ரீ, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிறுமிக்கு உடல்நிலை குணமடையாத காரணத்தினால், உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து, சிறுமி தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவமனைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிறுமியின் பெற்றோர் மருத்துவ உபகரணங்கள் வழங்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்