திருவான்மியூரில் `சரித்திர பதிவேடு' டில்லி பாபு வெட்டி சரிப்பு.. அதிரவிடும் பின்னணி

x

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த டில்லி பாபு என்பவர், சென்னை மாநகராட்சியின் 180 வது வார்டில் உள்ள தெருக்களில், குப்பைகளை சேகரிக்கும் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார். திருவான்மியூர் அவ்வை நகர் - எல்பி சாலை சந்திப்பில், வழக்கம்போல் பணியில் இருந்தபோது, அங்கு வந்த மர்மநபர்கள் 4 பேர், டில்லி பாபுவை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இறந்த டில்லிபாபு சரித்திர பதிவேடு குற்றவாளி என தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக, கொலை நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்