சைலண்ட்டா லீக்கான வீடியோ..கட்டம் கட்டி அடிக்கும் போக்சோ.. தலைநகரில் நடக்கும் விசாரணை..

x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதியப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை அமலாக்கத்துறையினர் கைது செய்து விசாரணைக்காக டெல்லி அழைத்துச் சென்றுள்ளனர். இதைக் கண்டித்து ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லம் முன்பு கட்சித்தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்