சென்னையில் இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள் | Chennai | Turtle

x

சென்னை திருவொற்றியூர், காசிமேடு, நீலாங்கரை, அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னையின் காசிமேடு, திருவொற்றியூர் பகுதிகளிலும், நீலாங்கரை முதல் பெசன்ட் நகர் வரையிலான கடற்கரை பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. இதனையடுத்து, எண்ணெய் கழிவுகள் கடலில் கலந்ததால் ஆமைகள் உயிரிழந்தனவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்