டன் கணக்கில் செத்து மிதந்த மீன்கள் - சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் அதிர்ச்சி

x

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

தகவல் அறிந்து சம்பவத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்களை குளத்தில் குவியல் குவியலாக இறந்து மிதந்த மீன்களை அகற்றினர்... அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நேற்று கார்த்திகை தீபத்தை ஒட்டி கோயில் குளத்தை சுற்றி ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றப்பட்ட போது, அப்போது பெய்த கனமழையின் காரணமாக விளக்கில் இருந்த நெய் மற்றும் எண்ணெய் அனைத்தும் குளத்துக்குள் சென்று... மீன்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் மீன்கள் இறப்பு குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். அப்பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசும் நிலையில், இதேபோன்று பலமுறை கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் மீன்கள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்