சென்னையில் குவியல் குவியலாக இறந்து கிடந்த மீன்கள் - அதிர்ச்சியில் மக்கள்

x

தூர் வரும் பணிக்காக மாதவரம் ரெட்டேரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு விட்டதால், அதில் மீன்கள் இறந்து கிடக்கின்றன. சென்னை மாதவரம் ரெட்டேரி பகுதியிலுள்ள ஏரியை மேம்படுத்துவதற்காக, அதனை தூர் வாரி ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு விட்டதால், ஏரியில் இருந்த மீன்கள் தற்போது இறந்து கிடக்கின்றன. தண்ணீரை வெளியேற்றுவதற்கு முன்பு அதிலுள்ள மீன்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது என சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்