மகளை விடுமுறைக்கு ஊருக்கு அழைக்க சென்ற தாய்... நடுவழியில் கட்டுப்பாட்டை இழந்த கார்...

x

தனியார் பள்ளி விடுதியில் தங்கி பயிலும் மகளை விடுமுறைக்கு அழைக்க வந்த தாய் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதா-நடராஜன் தம்பதியின் மகள் நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வருகிறார்.

இந்நிலையில், தீபாவளி விடுமுறைக்காக மகளை அழைத்து வருவதற்காக தம்பதி காரில் சென்று கொண்டிருந்தபோது, முதலைப்பட்டி சேலம் - கரூர் புறவழிச்சாலையில் குறுக்கே நாய் வந்ததால், கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் ராதா சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்