"உயிருக்கு ஆபத்து.." - ரேப்பிடோ ஓட்டுநர்கள் பரபரப்பு புகார்

x

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரேப்பிட்டோ பைக் டாக்ஸியின் பயன்பாடு அதிகமிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாகவே ஆட்டோ ஓட்டுநர்களும், டாக்ஸி ஓட்டுநர்களும் ரேப்பிட்டோ ஊழியர்களுடன் தகராறு செய்து வந்தனர். ரேப்பிட்டோவால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டதாகவும், பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டுமெனவும் கூறி ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி சங்கங்கள் போராட்டம் நடத்தின. இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்களால் தங்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தங்களை பொதுவெளியில் கண்டால் தாக்குவதாகவும் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு பைக் டாக்சி அசோசியன் சார்பில் புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்