ஊருக்குள் புகுந்த ஆபத்து.. நீலகிரி மக்களுக்கு எச்சரிக்கை

x

நீலகிரி மாவட்டம், கூடலூர் - பந்தலூர் பகுதிகளில் கட்டைக்கொம்பன் மற்றும் புல்லட் ஆகிய இரு யானைகளும், அவ்வப்போது கிராம பகுதிக்குள் நடமாடி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையினரின் கண்காணிப்பில் இருந்து திடீரென்று நழுவி, இந்த இரு யானைகளும் கிராமங்களில் நடமாடி வருகின்றன. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் வீதி வீதியாக எச்சரிக்கை செய்து வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்