கிரிப்டோ கரன்சி மோசடி... செக் வைத்த போலீசார் | thanjavur

x

கும்பகோணம் கிரிப்டோ கரன்சி மோசடி விவகாரத்தில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற பெயரில், நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், 18 மாதங்களுக்கு மாதந்தோறும்15 ஆயிரம் வழங்கப்படும் என ஆசை காட்டியதால், இந்த நிறுவனத்தில் ஏராளமானோர் முதலீடு செய்தனர். இந்தநிலையில், அண்மையில் இந்த நிறுவனம் மூடப்பட்டது. இதுதொடர்பாக, பணம் கட்டி ஏமாந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீசார், ஏற்கனவே நான்கு பேரை கைது செய்த நிலையில், தற்போது கார்த்திகேயன் என்பவர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்