குட்டி போட்ட நாய் அட்டூழியம்.. ஒரே நாளில் 5 கால்களுக்கு பிளாஸ்டர்.. சென்னையில் மக்கள் வேதனை

x

தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட எம்.கே.பி. நகர் மற்றும் காந்தி நகர் பகுதிகளில் நேற்று மட்டும் சுமார் ஐந்து பேரை தெருநாய்கள் கடித்துள்ளது.மேலும் இந்த வாரத்தில் மட்டும் சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்களை தெரு நாய்கள் கடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்பகுதியில் குட்டி போட்டுள்ள தெருநாய் ஒன்று போவோர், வருவோரை கடித்து வருகிறது. இது குறித்து மாநகராட்சியிடம் தெரிவித்தால், குட்டி போட்ட நாயை அப்புறப்படுத்த மாட்டோம் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்