"மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த கொடுமை"..தலைமையாசிரியை-க்கு எதிராக திரண்ட மக்கள்..

x

மடத்துக்குளம் அருகே பள்ளி மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில், தலைமை ஆசிரியையை பணி நீக்கம் செய்ய வேண்டுமென புகாரளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் கலையரசி. இவர், இப்பள்ளியில் பயிலும் மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசுவது, கழிவறையை சுத்தம் செய்ய வைப்பது, தண்ணீர் குடிக்க விடாமல் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது. இது தொடர்பான விசாரணையில், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபமானதால், அவரை பணியிட மாற்றம் செய்யக்கோரி வட்டார கல்வி அலுவலர் பரிந்துரை செய்தார். ஆனால், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டுமெனக் கோரி பெற்றோர் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்