`கிளம்பிய திடீர் வாக்குவாதம்' - கார் ஏற்றி கொலை செய்த கும்பல் - கோத்தகிரி மலையடிவாரத்தில் பகீர்

x

கோவை, கஸ்தூரி பாளையத்தை சேர்ந்தவர் அருண் பாண்டியன். தச்சுத் தொழிலாளியான இவர், சம்பவத்தன்று தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து கோத்தகிரி மலைப்பாதையின் காட்சி முனைக்கு பைக்கில் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே காரில் வந்திருந்த கும்பலுக்கும், அருணின் நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மூவரும் அங்கிருந்து கிளம்பி மலையடி வாரத்திற்கு வந்த நிலையில், அவர்களை காரில் வந்த கும்பலும் பின் தொடர்ந்தே வந்துள்ளது. அருள் தன் நண்பர்களுடன் சேர்ந்து சாலையோரம் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தபோது, மூவர் மீதும் அவர்களை நோட்டமிட்டு வந்த கார் திட்டமிட்டே மோதிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் அருண்பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த அவரின் நண்பர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இது குறித்து, அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், காரில் தப்பிச் சென்ற 16 வயது சிறுவன்ன உட்பட ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்