கழுத்தை நெரித்த கடன் - விவசாயி வெளியிட்ட பகீர் வீடியோ

x

கடன் கொடுத்தவர் மாடுகளை எடுத்துச் சென்றதால் மனமுடைந்த விவசாயி விஷம் அருந்தி தற்கொலை செய்த கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்து உள்ள ருக்வார்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி விவசாயம் செய்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக கௌதம், வஞ்சிமுத்து ஆகியோரிடம் பழனிச்சாமி, ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி 4 மாடுகளை வாங்கி இருக்கிறார். இந்த நிலையில் வாங்கிய கடனை சரிவர கட்ட முடியாததால், கடன் கொடுத்தவர்கள் மாடுகளை எடுத்து சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த பழனிச்சாமி மானம் போகும் முன் உயிருடன் இருக்க வேண்டிய அவசியமில்லை என கூறி விஷம் அருந்திவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு அதனை வீடியோவாகவும் வெளியிட்டார். இந்த நிலையில் மயங்கிய நிலையில் கிடந்த பழனிச்சாமியை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த பழனிச்சாமி மருத்துவமனையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்