"இந்த பேஸ்ட் பல்லு விளக்க இல்ல... ஆனால் ரொம்ப காஸ்ட்லி" மறைச்சிதான் எடுத்து வருவாங்க | Chennai

x

துபாயில் இருந்து சென்னைக்கு, மூன்றரை கிலோ தங்கம் கடத்திய இலங்கை இளைஞர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய வருகைப் பகுதியில் உள்ள கழிவறைக்கு சென்ற இருவர், நீண்ட நேரம் கழித்து வந்ததால் சந்தேகமடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், சோதனை செய்தனர். அப்போது, உள்ளாடையில், மூன்றரை கிலோ தங்கத்தை, பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். துபாயில் இருந்து சென்னைக்கு வந்து பின்னர் கொழும்பு செல்ல இருந்ததும் தெரியவந்தது. இருவரிடமும் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்