நெல்லையில் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை... மேயருக்கு எதிராக சொந்தக் கட்சி கவுன்சிலர்கள் போராட்டம்

x

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து தி.மு.க கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெறும் என்று மாநகராட்சி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை அடுத்து வழக்கம்போல், இன்று தங்கள் பகுதிக்கான புகார்களை தெரிவிப்பதற்காக மனுக்களுடன் மாநகராட்சி குறைதீர் கூட்ட அரங்கிற்கு, மக்களும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களும் வந்திருந்தனர்.

ஆனால் மனுக்களை பெற்றுக் கொள்வதற்கு மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, கமிஷனர் உட்பட யாரும் அங்கு வரவில்லை. இதனால் சில மணி நேரங்கள் அங்கே பொதுமக்களுடன் காத்திருந்த நிலையில், தி.மு.க கவுன்சிலர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் கவுன்சிலர்களும்அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்